அ முதல் ஃ வரை

நான் படித்தது, பார்த்தது, என்னை பாதித்தது என எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள...

Monday, February 06, 2006

விஜயகாந்த் - 3

விஜயகாந்த் தன் கட்சி மாநாடு துவங்குவதற்கு முன்பே, விகடனுக்கும், குமுதத்திற்க்கும் கொடுத்த பேட்டியில் தான் டிசம்பர்
மாதத்திலிருந்து சுற்றுப்பயணம் போவதாக கூறியிருந்தார்.
ஆனால் தாங்கள் பேட்டி கண்டதையே மறந்தபடி ஜு.வியிலும், ரிப்போர்ட்டிரிலும் விஜயகாந்த் மாநாட்டிற்கு பிறகு அடங்கி
விட்டதாகவும், அடக்கபட்டதாகவும் கிசுகிசுத்து மாய்ந்தார்கள். இதோ விஜயகாந்த் தான் சொன்னபடி திட்டமிட்டபடி சுற்றுப்பயணம்
செய்ய ஆரம்பித்து இரண்டு மாதங்களாகிவிட்டன. இன்றைக்கு அவர் கடுமையான போட்டியை தருவார் என கணித்துக்கொண்டிருக்கிறார்கள்.

விஜயகாந்த் ஒரு திட்டமிடுதலுடன் தான் களத்திலிருக்கிறார். இந்த முறை அவர் தன் கணக்கை தொடங்கியதாகதான் கருத வேண்டும். கழக பாணி அரசியலலிருந்து முற்றிலுமாக விலகிட முடியாதபடி தான் அவர்களும் தங்கள் கட்சி மாநாடுகள், அலங்காரங்கள், தோரணைகள், பதவிகள், பட்டங்கள் என செயல்படுகிறார்கள். விஜயகாந்த் கூடுதல் கவனத்துடன் இவற்றை
தவிர்த்தால் நிச்சயம் நாம் மகிழலாம்.

கலைஞருக்கு பிறகு இந்த புரட்சி கலைஞர் தான், ஜெ.வுக்கு மாற்றாக, நிகராக மக்கள் கருதுவார்கள் என நான் நினைக்கிறேன். தமிழகத்தின் அணைத்து தரப்பு ஆதரவையும் பெற்ற தலைவராக வை.கோ.வையோ, ராமதாசையோ, ஸ்டாலினையோ மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நான் நினைக்கவில்லை.

2006-ல் தி.மு.க தனி பெரும்பான்மை பெற்று, ஸ்டாலினை முதல்வராக
தேர்ந்தெடுத்தால் தான் உண்டு. அந்த தி்ட்டத்தோடு தான் கருணாநிதி இந்த முறை தேர்தலின் மூலம் தான் முதல்வராக ஆசைப்படவில்லை என அருளியிருக்கிறார்.

ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு தலைமுறை வாக்காளர்கள் புதிதாக வாக்களித்தபடி இருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் மின்னணு
மயத்தினாலும், குளறுபடிகள் குறைந்துள்ளதாலும் வாக்குசாவடிக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் கூடியிருக்கிறது. காஞ்சியிலும்,
கும்மிடிப்பூண்டியிலும் வாக்களிப்பவர்களின் சதவிகிதம் கூடியதால் தான் அ.தி.மு.க எளிதில் வெற்றி பெற முடிந்தது. இவர்களில்
கணிசமானவர்கள் கழகங்களுக்கு மாற்றாக தான் வாக்களிக்கிறார்கள். அதே போல கழகங்களின் வாக்கு, காலத்தால் குறைந்தபடி
இருக்கும்(தீவிர ஆதரவாளர்கள் மற்றும் நீண்ட நாள் தொண்டர்களின் இயற்க்கையான அல்லது செயற்க்கையான மரணத்தினால்). இந்த புதிய வாக்காளர்களை கவர்வதில் தான் விஜயகாந்த் உட்பட பலரின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.

அடுத்த தேர்தலுக்குள் அவர் மற்றும் அவருடைய கட்சியினருடைனய செயல்பாடுகள், புதிய தலைமுறை வாக்காளர்கள் என சேர்ந்து
விஜயகாந்தின் "பேரரசை" நிர்ணயிப்பார்கள்.

நீங்கள் சொன்னது: (0)

Post a Comment

<< முகப்பு