அ முதல் ஃ வரை

நான் படித்தது, பார்த்தது, என்னை பாதித்தது என எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள...

Friday, February 03, 2006

மீண்டும் சுவாமி

தமிழ் எழுத பழகிய பிறகு, முதன் முதலாக அரசியல் அலசல் தான் செய்ய தோன்றியது. தேர்தல் காலம் ஆயிற்றே!

இந்த வார விகடனில், சுப்பிரமணிய சுவாமியின் பேட்டி வெளிவந்திருக்கிறது.
ஜெயலலிதாவின் கடந்த ஆட்சியை மக்கள் வெறுக்க அஸ்திவாரம் போட்டவர் இந்த சுவாமி தான். தலைவியின் தடாலடியில் என்ன
எதிர் நடவடிக்கை எடுப்பது என துவண்டிருந்த நேரத்தில் டான்சி வழக்கை தொடுத்து எதிர்கட்சிகளின் துாக்கத்தை கலைத்தார்.

எல்லோரும் காமெடி என அசட்டை செய்துவிட அதை அரசியல் தெரிந்த கலைஞர் மிக சரியாக 2001 தேர்தலில் உபயோகபடுத்திக்கொண்டார். ஜெயித்தது தி.மு.க என்றாலும் , அதற்கு உரம் போட்டவர் சுவாமி தான்.

சோனியுவுடனான டீ பார்டி கூட, பி.ஜே.பி யுடன் கூட்டணி கண்டிருந்த ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக வலுவிழக்க சுவாமி ஆடிய
நாடகமாக இருக்கலாம்.

இந்த பேட்டியில், தமிழக அரசியலில் தன் கவனம் இன்னும் இருக்கிறது என பதிய வைத்திருக்கிறார். ஜெயேந்திரர் ஆதரவு நிலையுடன் இந்த முறை
ஜெ.யை கவிழ்க்க நினைக்கிறார். அவர் கனவு பலிக்கிறதா பார்ப்போம்.

நீங்கள் சொன்னது: (0)

Post a Comment

<< முகப்பு