அ முதல் ஃ வரை

நான் படித்தது, பார்த்தது, என்னை பாதித்தது என எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள...

Monday, February 06, 2006

வேட்பாளர் குஷ்பு

குஷ்பு மாக்ஸிம் பத்திரிக்கையின் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார். புதிதாய் தொடங்கப்பட்ட ஆங்கில பத்திரிக்கைக்கு
தேவைக்கும் அதிகமான இலவச விளம்பரம் கிடைத்துவிட்டது. குஷ்பூவிற்க்கும் தான். தமிழ் திரைப்பட 'சத்யா' வின் தெலுங்கு
பதிப்பில் குஷ்பு நீச்சல் உடை என்கிற பெயரில் மிக குறைந்த அளவே உடுத்தி நடித்தார். மாக்ஸிமின் மார்ஃபிங் பொய் ஒன்றும்
பெரிதில்லை தான்.

இன்றோ அவர் தமிழகத்தின் மருமகள் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாயுமாகிவிட்டார். ஆண்களுக்கு அவர் 'முன்னாள்'
கவர்ச்சியாகிவிட்டார். தாய்க்குலங்களுக்கோ அவர் கல்கி ஆக, ஜாக்(கெட்)பாட் ராணியாகி விட்டார்.

கற்பை பற்றி வாய் திறந்து, அனுதாபங்களை அள்ளிக்கொண்டார். உண்மையில் குஷ்புவின் நற்செய்தியால், பாட்டிகள் இன்றைய
சிறிசுகள் செய்யும் சேட்டைக்கும், அடிக்கும் கொட்டத்திற்க்கும் இது அவசியம் தான் என்ற கருத்தும்; பேத்திகள் கூடுதல் எச்சரிக்கை
வேண்டும் என்ற உறுதியும், இன்றைய தாய்மார்கள் தங்கள் பெண்கள் வீடு திரும்புவதற்க்குள் அதிக கவலையும் கொண்டார்கள். இந்த
மூன்று தலைமுறையுமே அடுத்து நடந்தவை அனைத்துமே தேவையற்றவை என தெளிவு கொண்டிருக்கிறார்கள். ஜெயா டி.வி.யில்
குஷ்புவின் கண்ணீரும், மேட்டூரில் அவர் எதிர்கொண்ட வரவேர்ப்பும் மக்களின் மனஓரத்தில் கரிசனம் உண்டாக்கியிருக்கிறது.

ஆகவே அவருடையை இன்றைய அந்தஸ்த்திற்கு மாக்ஸிமின் மார்ஃபிங் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் ஆகி விட்டது.
தமிழன் அந்த புத்தகத்தை வாங்கி அதன் வியாபரத்தை பெருக்கியிருப்பான். பெண்கள் இது என்ன சோதணை மேல் சோதணை என
அனுதாபம் கொண்டிருப்பார்கள். ஆக கூடி குஷ்புவின் புகழ்மானி உயர்ந்திருக்கிறது.

இந்த அரிய வாய்ப்பையே ஒரு பலமான அஸ்த்திரமாக்க ஜெ.யால் முடியும். அது குஷ்பு வேட்பாளர் போட்டியில் கலந்துகொள்வது
தான். சென்னையில் எஸ்.வி.சேகரும், ராதாரவியும் வெற்றி பெறும் போது குஷ்புவால் முடியாதா என்ன? குஷ்புவை ஸ்டாலினுக்கு
எதிராக இல்லாமல் அன்பழகனுக்கு எதிராக நிறுத்தினால் குஷ்புவும் தமிழக எம்.எல்.ஏ-யாகி அரசியல் சாதனை படைத்திடுவார்.

வளர்க குஷ்பு! வாழ்க தமிழகம்!

நீங்கள் சொன்னது: (0)

Post a Comment

<< முகப்பு