அ முதல் ஃ வரை

நான் படித்தது, பார்த்தது, என்னை பாதித்தது என எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள...

Monday, February 06, 2006

ஜெ. மீது அதிருப்தியா? திருப்தியா?

கொஞ்சம் புதிரான கேள்வி தான். அதன் பதில் கூட. ஒரு சாரரை திருப்தி படுத்த ஒரு காரியத்தை முனைகையில் அதனால்
பாதி்க்கபட்டவர்கள் அதிருப்தி ஆகி விடுகிறார்கள்.
1) லாட்டரியை தடை செய்ததால் ஏழைப்பெண்கள் நிம்மதியுற்றார்கள். ஆனால் அதை நம்பி தொழில் செய்யும் மக்களுக்கு மாற்று
திட்டங்கள் ஏதுமில்லாததால் அவர்கள் அதிருப்தியுற்றார்கள்.
2) அரசு ஊழியர்களை கைது செய்தபோது பாரட்டியவர்கள் லஞ்சம் கொடுத்து(ம்) காரியம் கைகூடாதவர்கள், கொடுக்க முடியதவர்கள்
மற்றும் லஞ்ச லாவண்யத்தை முற்றும் ஒழிக்க நிணைத்தவர்கள். 90% அரசு வருவாயை பங்கு போட்டுக்கொள்பவர்கள் என முழங்கிய பிறகு அவர்கள் எப்படி மனதார ஆதரிப்பார்கள்? மக்கள் மனதில் ஒருவித சந்தோஷம் ஏற்பட இந்த முழக்கமும் காரணம்
3) பலியிடுதல் கூடாது என்ற பிறகு, சாமி குத்தம் நேருமோ என கிராமத்து வாக்குகளும் அதிருப்தியில்.
4) கட்டாய மதமாற்றுச் சட்டம் எங்கே தங்களில் சிலரை தோலுரித்துக்காட்டிவிடுமோ என அதிருப்தியானவர்கள் ஒருபுறம்

இவையெல்லாமே இன்றைய தேதியில் வாபஸயாகிவிட்டது.

மழை நீர் சேகரிப்பு திட்டத்தை நிறைய கால அவகாசம் அளிக்காமல் சாம தான பேத கண்டிப்போடு அமல்படுத்திய முறையில்
அதிருப்தி கண்டவர்கள் அதன் பயனை கண்ட பிறகு சமாதானம் அடைந்திருப்பார்கள் என நம்பலாம்.

சுனாமி, வெள்ள நிவாரணப்பணிகளின் மூலமாக பாதிக்கபடாதவருக்கும் அள்ளித்தந்து ஆதரவு நிலையை உருவாக்கியிருக்கிறார்.

ஜெ சட்டத்தின் மூலமாகவோ, அல்லது தன் செயலாலோ இஸ்லாமியர்களை மட்டும் தான் அதிருப்தி்க்குள்ளாக்கவில்லை. ஆனால்
அன்னதானம் அளித்து கவர்ந்துவிட்டார்.

இச்சலுகைகள் தேர்தலுக்காக மட்டுமே என மக்கள் சந்தேகப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் கடைசி நேரத்தில் அல்லாமல்
பாராளுமண்ற தேர்தல் தோல்வி கண்ட முதல் அமுல் படுத்தி வருவதால் ஜெ. உண்மையிலேயே திருந்தி, உணர்ந்து தான் செய்கிறார் என நம்பவும் வாய்ப்பிருக்கிறது.

அதோடு புதிய ஆட்சியில் இன்ன வாக்குறுதிகள் திட்டங்கள் என இன்னும் ஜெ. அறிவிக்கவில்லை. வீராணம், வீரப்பன் என ஜெ.
சொன்னவற்றை முடித்துக்காட்டியுள்ளதால் நம்பகத்தன்மை மக்களிடம் கூடி அதுவும் வாக்குகளை திருப்பலாம்.

உண்மை விடை தெரிய நாம் காத்திருக்க வேண்டியது தான்!

நீங்கள் சொன்னது: (0)

Post a Comment

<< முகப்பு