அ முதல் ஃ வரை

நான் படித்தது, பார்த்தது, என்னை பாதித்தது என எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள...

Tuesday, February 07, 2006

தனித்தவில்

மழை தூரிக்கொண்டிருந்த மாலை நேரம் ஓரு அமெரிக்க நகரத்தில், அதுவும் டவுன்டவுனில் இரயில் நிறுத்தத்தை நோக்கி நகர்கையில் தூரத்தில் ஓரு தாளக்கோர்வை கேட்டது. எங்கோ கேட்ட மாதிரி உணர்வு. அருகில் செல்லச் செல்ல தமிழ் மணம் வீசியது. கல்யாண தவில் போல!

ஓரு ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞன் காலி பெயிண்ட் டப்பாக்களை கொண்டு ஓரு சின்ன கச்சேரி செய்து கொண்டிருந்தான். சங்கீதம் கற்றுக்கொள்ளாமல் போனோமே என்று வருத்தம் உண்டாயிற்று. கேள்வி ஞானத்தால் அது ஏனோ ஓரு சரிகமபத ஸ்வரத்தில் இருப்பது புரிந்தது. சுமார் பத்து நிமிடம் எந்த மேற்கத்திய வாடையுமில்லாமல் ஓரு தனி தவில் ஆவர்த்தனம் கேட்டது போன்ற சுகம்.

பக்கத்தில் சென்று எங்கே கற்றுக்கொண்டாய் என கேட்க வேண்டும் போலிருந்தது. மழை இன்னும் விடாது இருக்க, இரயிலும் வர வீடு நோக்கி வந்து விட்டேன்.

அடுத்த தடவை கேட்க வேண்டும்...அவன் இசையையும் என் கேள்வியையும்!

நீங்கள் சொன்னது: (0)

Post a Comment

<< முகப்பு