அ முதல் ஃ வரை

நான் படித்தது, பார்த்தது, என்னை பாதித்தது என எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள...

Tuesday, February 28, 2006

யாழிசை கேட்பது எப்போது?

வைகோ திருவாசகம் Oratorio அறிமுக விழாவில் தன் பாராட்டுரையால் நம்மை கவர்கிறார். அந்த உரைக்காக அவர் எப்படி தன்னை தயார்படுத்தியிருக்கிறார் என காணும் போது வியப்பாயிருக்கிறது. நகைச்சுவைக்கு சொல்வது போல புள்ளிவிவரம் அறிந்திருப்பவர்கள்
எல்லாம் புத்திசாலிகள் இல்லை என இல்லாமல் உண்மையிலேயே ஒரு ஆர்வம் காட்டி பேசுகிறார்.

பழக்கத்தில் இருந்த யாழ் பற்றியும் குறிப்பிடுகிறார். யாழ் இனிது குழல் இனிது மக்கள் தம் மழலை சொல் கேளாதவர் என பேசி்க்கொண்டு யாழிசை எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள ஏன் நமக்கு ஆர்வம் வரவில்லை?

இத்தனை விஷயங்கள் அறிந்திருந்தும் யாழை யாரும் புதுப்பிக்க முயலாதது எப்படி என ஆச்சரியமாய் இருக்கிறது. எத்தனையோ குறிப்புகள் வைகோ குறிப்பிடுகிற இலக்கியங்களில் இருக்க வேண்டும். மாதிரி யாழ் லண்டன் மியூசியத்திலும் இருக்கிறது என்ற தகவலையும் வைகோ சொல்கிறார்.

அந்த யாழை மீண்டும் உருவாக்க ஆர்வம் காட்ட வேண்ட பட்டியலில்
1. இளையராஜா போன்றவர்கள்
2. சங்கீதம் பயிலுபவர்கள்/ வித்வான்கள்
3. வீணை தயாரிப்பவர்கள்
4. தஞ்சை தமிழ் பல்கலைகழகம்
5. சென்னை இசைக் கல்லூரி
6. மதுரை தமிழ் சங்கம்
7. மதுரை ஆதீனம்
8. தமிழிசையில் கச்சேரி செய்ய வேண்டும் என போராடும் பா.ம.க
9. தமிழுக்காக அதை செய்தோம் இதை செய்தோம் என சொல்லும் தி.மு.க
10. இன்னும்

செய்வார்களா? யாழிசை கேட்க முடியுமா?

நீங்கள் சொன்னது: (0)

Post a Comment

<< முகப்பு