அ முதல் ஃ வரை

நான் படித்தது, பார்த்தது, என்னை பாதித்தது என எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள...

Wednesday, February 15, 2006

அந்நியன் (அ)நியாயம்?

அந்நியன் படத்தின் சில காட்சிகளை டி.விக்களில் பார்த்த பிறகு உடனடியாக பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. பார்த்த சில தண்டனை காட்சிகளும் ஏமாற்றமளித்தன. சுஜாதா பல்வேறு விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த படத்தை ஒரு விதமான ஃபான்டஸியாக எடுத்துக் கொள்ள சொல்லியிருந்தார்.

சமீபத்தில் அந்த படத்தை பார்த்தேன். சங்கர் வழக்கம் போல பிரம்மாண்டமாக எடுத்திருந்தார். திருவையாற்றின் சங்கீத உற்சவத்தையும் வேறு பாடலில் டூலிப் தோட்டங்களின் அழகையும் பிரமாதமாக திரைக்கு கொண்டு வந்திருக்கிறார். மகிழ்ச்சி.

தண்டனை கொடுக்க புறப்படும் அந்நியன் யாருக்கும் திருந்த வாய்ப்பு கொடுக்கவில்லை. அவர்கள் மன்றாடியும் அந்நியன் அந்நியனாகவே இருக்கிறான். ஆனால் தன் காதலிக்கு தண்டனை என வரும்போது அந்நியனுக்குள் அம்பியும் அம்பிக்குள் அந்நியனும் பெரும் போராட்டம் நடத்துகிறார்கள். (சபாஷ் விக்ரம்!) முடிவு உங்களுக்கு தெரிந்திருக்கும்.

ஊழலையும் தவறுகளையும் ஒழிப்பதில் உள்ள சிக்கலே தன் உறவு (குமுதத்தில் ஒருவர் குறும்பாக அவாள் என அரசு பதில்
கேட்டிருந்தார்) என வரும் பொழுது காணாமல் இருந்துவிடுவது தான். சங்கரே சொல்கிற மாதிரி இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு
பைசாவாக திருடுவதால் தான் அதை ஒழிக்க முடியவில்லை. கதாநாயகி நாயகனுடன் சேர வேண்டு்ம் என்கிற தமிழ் சினிமா இலக்கணப்படி மன்னித்து திருந்தி விடுகிறார். இத்தனைக்கும் நாயகிக்கு ஒரு வலுவான பாத்திரமும் இல்லை. அவள் காதலிப்பதும் ரெமோ என்பவனை. இதனால் ஃபாண்டஸி ஃபாண்டஸியாகவே இருந்து விடுகிறது.

ஆக கூடி அந்நியன் தனக்கு ஒரு நியாமும் அடுத்தவர்களுக்கு வேறு ஒரு நியாமும் என ஒரு சரசாரியாகிவிடுகிறான். நாயகி முன்
கூட்டியே காப்பாற்றி விடுகிறாள் என சமாளிப்பு வேண்டாம். ஒவ்வொரு இந்தியனுக்கும் இது போன்ற கோபம் அடுத்தவரிடத்தில்
இருக்கிறது. (அவை என்ன என்ன என சொல்லவே ஒரு தனி இடுகை தேவைப்படும் என்பதால்..தவிர்க்கிறேன்) இதில் எப்படி
ஊழல்களை ஒழிப்பது? தவறுகளை திருத்துவது?

சங்கர் போன்றவர்கள் தங்கள் திறமையை ஏற்கனவே நாம் அறிந்தவற்றை இவ்வளவு செலவு செய்து கொடுப்பதற்கு பதில் ஆக்கபூர்வமான கருத்தை சொல்ல முயற்ச்சிக்கலாம். சுஜாதாவையுத் கூட வைத்துக்கொண்டு விஞ்ஞான முன்னேற்றத்தில் தமிழ்நாடு இன்னும் 50 வருடத்தில் எவ்வாறு இருக்கும் என யோசிக்கலாம். அல்லது "Anna and the King" or "Crouching Tiger and
Hidden Dragon" போல ஒரு சுவராஸ்யமான வரலாற்றையோ அமானுஷ்யத்தையோ செய்யலாம். சங்கரிடம் இருக்கும் அந்த
பிராம்மண்ட யானைக்கு இவை நல்ல தீனியாக இருக்கும். தமிழக தயாரிப்பாளர்களிடமோ அல்லது இயக்குனர்களிடமோ சங்கரின்
இந்த பலம் இல்லை. கமலின் மருதநாயகத்தை கூட இருவரும் சேர்ந்து முனையலாம்.

அந்நியனை பற்றி என்னுடைய முந்தைய இடுகையை இங்கே படிக்கலாம்
http://deedaya.blogspot.com/2005/08/anniyan-anniyamai.html

சிவாஜி இதில் எந்த வகையோ? பார்ப்போம்.

நீங்கள் சொன்னது: (0)

Post a Comment

<< முகப்பு