அ முதல் ஃ வரை

நான் படித்தது, பார்த்தது, என்னை பாதித்தது என எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள...

Saturday, March 25, 2006

ஜெயாவில் வைகோவின் நேர்முகம் - பகுதி 2

ஜெயா டி.வியில் தற்பொழுது தான் வைகோவின் நேர்முகம் (மறு?)ஒளிப்பரப்பாகி முடிந்திருக்கிறது.

கூட்டணி ஒப்பந்தம் முடிவாகி போயஸ் தோட்ட வாசலில் தோன்றிய வைகோ பெரும் சங்கடப்பட்டார் என கழுகு (ஜீ.வி) முதற்கொண்டு அதை டி.வியில் கண்டவர்கள் சொன்னார்கள். ஆனால் இந்த பேட்டியை கண்ட பொழுது வைகோவிற்கு அப்படி ஒரு சங்கடம் இருப்பதாக தோன்றவில்லை. சொல்லப்போனால் இயல்பாக ஓய்வாக பேசினார்.

பேட்டி கண்ட ரபிபெர்ணார்ட் மிக சாமார்த்தியமாக மக்களுக்கு தோன்றக்கூடிய நெருடல்களை கேள்வியாக்கிவிட்டார்

உதாரணத்துக்கு:
1) 2004 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்தவர்கள் எப்படி இரண்டு ஆண்டுகளுக்குள் மாற்றி போடுவார்கள் என நினைக்கிறீர்கள்?
2) ஈழ பிரச்சிணையில் உங்களுக்கும் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கும் வேறுபாடு இருக்கிறதே?
இந்த கேள்விக்கு பதிலளிக்கையில் ஜெ இலங்கை பிரதமர் சந்திப்பை தவிர்த்ததை சொன்னார். உண்மையில் அது முதல் சிக்னல் என அப்போதே பேசப்பட்டது. மாறிவிட்ட சூழ்நிலையில் போர் அபாய நிலையில் ஜெவின் ஈழ நிலைப்பாடு இதுவென உலக தமிழர்களுக்காக சிக்னல் என பொதுவாக குறிப்பிட்டார்.

வைகோ ஜெவின் சாதனைகளை பட்டியலிட்டார். அவை உண்மையானவையும் கூட. ஆனால் கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் காளிமுத்து பேசுகிறாரோ என நாம் சந்தேகப்படுமளவிற்கு உற்சாகமாக குறிப்பிட்டார்.
அந்த பட்டியல்:
1) ஆசிரியர் மாற்ற உத்தரவு தொடர்பான அரசியல் கலப்பற்ற கவுன்சிலிங்
2) சுனாமி நிவாரணம்
3) இலவச சைக்கிள்
4) உழவர் பாதுகாப்பு சட்டம்
5) மகளிர் சுய உதவிக்குழுக்கள்
இவை உண்மைதான் என்பவர்கள் கண்டவர்கள் அறிவார்கள். மகாமக திருவிழாவின் போது கும்பகோணத்தில் எவ்வாறு முழு ஏற்பாடு (ஏற்கனவே கற்ற பாடம் அப்படி) செய்தார்கள் என்பதை மக்கள் ஒப்புக்கொள்வார்கள். அந்த ஏற்பாடு அதே கும்பகோணத்தில் பள்ளி தீப்பிடித்து எறிந்த பிறகு சிகிச்சையில் அவசர நிலையில் பணியாற்ற அந்த பகுதி மருத்தவமனைகள் சிறப்பாக செயல்பட்டதையும் பாராட்ட வேண்டும்.

ரபி குறைவாகவே கேள்வி கேட்டார். எதிராளி பேசுகிற பொழுது நீங்கள் அமைதியாய் இருந்தால் எதிராளி அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக இன்னும் பேசுவார். தன் கூட்டணி செயலை நியாயபடுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள வைகோவிடமும் ரபி அமைதியாக இருந்தார். (எடிட்டிங்கில் கட் செய்திருப்பார்களோ?). வைகோ நிறையவே பேசினார். சன் டிவி, ராஜ் டிவி, மாறன், தினகரன், குங்குமம், சுமங்கலி விஷன், கேபிள் மசோதா என.. பார்த்தவர்களுக்கு அவை பொய்யில்லை என புரிந்திருக்கும். (ஆனால் ஊடே அமெரிக்கா போன்ற நாடுகளில் உற்பத்தி விலையை விட குறைவாக விற்று மற்ற நிறுவனங்களை நஷ்டம் அடைய சட்டம் அனுமதிக்காது என்று குறிப்பிட்டார். தினகரன் ஒரு ரூபாயில் விற்பதை தான் சொன்னார். ஆனால் சமீபத்தில் வால்மார்ட் பற்றி நான் படித்த ஒரு புத்தகத்தில் வால்மார்ட் எப்படி ஒரு ஊறுகாய் கம்பெனியை குறைந்த விலையில் அதிக எடையுள்ள ஊறுகாய் ஜார்களை சப்ளை செய்ய கடுமை காட்டி அந்த கம்பெனி மஞ்சள் கடுதாசி (bankruptcy) கொடுக்கும் நிலைக்கு தள்ளியது என சுட்டிகாட்டப்பட்டிருந்தது.)

ஜெயாவில் பணிபுரியும் ரபி கூட செல்வி ஜெயலலிதா என பேசுகையில் வைகோவோ மாண்புமிகு டாக்டர் புரட்சிதலைவி என மரியாதை காட்டினார். ஜெ என்ன மாயம்மய்யா கையில் வைத்திருக்கிறார்? வெளியில் புலி எல்லாம் அம்மா பக்கம் வந்தவுடன் வீட்ல எலியாகி விடுகிறார்கள்.

இந்நிலையில் ஜெவிற்கு ஒரு சிறந்த பேச்சாளர் கிடைத்திருக்கிறார். வைகோ தன் நிலைப்பாடு பற்றி சமாதனாம் செய்யவே நிறைய நேரம் செலவிட வேண்டும் என பலர் நினைக்கிறார்கள். அதற்கு தேவைப்படாது எனவே நான் நினைக்கிறேன்.

காலச்சக்கரம் தான் என்ன பாடுபடுத்துகிறது. சமீபத்திய நிகழ்வான சோனியாவின் "office of profit" ராஜினாமாவை ஜெ நாடகம் என சாடியிருக்கிறார். மத்தியில் இன்னும் இருக்கும் வைகோ என்ன சொல்வார்? 40 எம்பிக்களும் ராஜினாமா செய்துவிட்டால் மத்திய ஆட்சியே கவிழும் நிலையில் மறு தேர்தல் வந்துவிட்டால் ஜெவின் இத்தாலி நிலைப்பாட்டிற்கு வைகோ என்ன சமாதானம் சொல்வார்?

காலத்தின் தீர்ப்பு! (இதை விட politically correct பதில் என்னவாக இருந்துவிட முடியும்)

நீங்கள் சொன்னது: (9)

At 8:16 PM, Blogger IdlyVadai சொல்வது என்னவென்றால்...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இதை பற்றி இட்லிவடையில் எழுதியிருக்கிறேன். நன்றி

 
At 8:56 PM, Blogger தயா சொல்வது என்னவென்றால்...

நன்றி இட்லி வடை.

 
At 6:38 AM, Blogger Badri Seshadri சொல்வது என்னவென்றால்...

என்னைக் கேட்டால் வைகோ வாயைப் பொத்திக்கொண்டு எனக்கும் ஜெயலலிதாவுக்கும் வாக்களியுங்கள் எனுமட்டும் சொல்லவிட்டுப்போகலாம். இப்படி ஏன் திமுக அணியை விட்டு வெளியே வந்தேன் என்று சால்ஜாப்பு சொல்வது அசிங்கமாக உள்ளது.

எளிதாக, 'இவர் அதிக சீட்டு கொடுத்தார், வந்தேன்' என்று சொன்னால் முடிந்துவிட்டது. அதைவிடுத்து நேற்றுவரை குற்றம் சொல்லிவிட்டு நாளை பல்லவியை மாற்றி, பிறகு இன்னமும் ஒரு வருடம் கழித்து திருப்பி பல்டி அடிக்கும்போது மானம் போகுமே என்று கவலைப்படுவதில் அர்த்தமில்லை.

வைகோவுக்கு ஒரேயொரு நல்ல விஷயம் என்னவென்றால் திமுக கூட்டணியில் இருக்கும்போது சன் டிவி கண்டுகொள்ளவில்லை. அதிமுக பக்கம் வந்ததும் ஜெயா டிவியில் நல்ல exposure. அவ்வளவுதான்.

வைகோ சோனியாவின் ஆதரவாளர் எல்லாம் இல்லை. ஆனால் வலியப்போய் காங்கிரசைத் திட்டமாட்டார் என்றே நினைக்கிறேன். அவரது முயற்சிகள் எல்லாம் கருணாநிதியையும் ஸ்டாலினையும் தாக்குவதிலேயே இருக்கும். பாமகவை எதிர்க்கும் தொகுதிகளில் பாமகவும் மதிமுகவும் எப்படி ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளப்போகிறார்கள் என்று கவனிக்க வேண்டும்.

 
At 7:22 AM, Blogger தயா சொல்வது என்னவென்றால்...

பத்ரி,

ஏன் வந்தேன் என்ற காரணம் தேவையற்றவை தான். ஆனால் அவர் ஏமாற்றிவிட்டார் என்றல்லவா செய்தி பரவுகிறது.

தான் பட்ட காயத்தையும் பேசுகிறார். இதில் சால்ஜாப்பு ஒன்றும் இல்லை. நாம் இந்த கூட்டணியை எதிர்பார்க்காததால் அதுவும் வைகோ நாணயமானவர் ஜெவிடம் போக மாட்டார் என நம்பியதால் ஏமாற்றமாக இருக்கிறது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது இவற்றை பேச மாட்டார் என தான் நான் நினைக்கிறேன்.

 
At 8:26 AM, Anonymous Anonymous சொல்வது என்னவென்றால்...

vaiko is a "santharpavathi "

 
At 12:07 AM, Blogger சீனு சொல்வது என்னவென்றால்...

எனகென்னவோ வைகோ இப்படி செய்ததற்கு சாதி வாரியான வோட்டுக்களும் ஒரு காரணம் போல் தெரிகிறது. பச்சோந்தி மாலடிமை (அதாங்கோ ராமதாஸ் (எ) இராமதாசு) அவர்கட்கு மக்கள் அளித்த ஆதரவே வைகோவை யோசிக்கவைத்திருக்கவேண்டும்.

சீனு.

 
At 1:14 AM, Blogger Prabu Raja சொல்வது என்னவென்றால்...

Tamilnadu arasiyalil yaar 'santharpavathi' illai endru solla mudiyuma?

Including P.Chidamparam, ellorume santharpavathigalthan.

 
At 7:08 AM, Blogger தயா சொல்வது என்னவென்றால்...

சீனு,

வைகோவை நாயுடுவென பார்த்து வாக்களிப்பார்களா என்ன? அப்படி ஒன்றும் நான் நினைக்கவில்லை.

வைகோ எடுத்திருக்கும் முடிவு மதிமுக உயிர்ப்போடு இருக்க வேண்டும் என்பதற்காக. ஜெவுடன் கூட்டணி வைப்பார் என யாரும் நம்பாததால் கொஞ்சம் ஏமாற்றமளிக்கிறது. அது சரியாகிவிடும்.

சில நண்பர்கள் விஜயகாந்துடன் கூட்டணி வைத்திருக்கலாம் என்றார்கள். அப்படி நடந்திருந்தால் ஜாதி என்பது வலுவாகியிருக்கும். அப்படி நடக்காததும் நல்லதே. எந்த அலையும் இல்லாத நிலையில் விஜயகாந்திற்கும் தன் பலம் என்ன என பார்ப்பதற்கு இது நல்ல வாய்ப்பு.

 
At 7:10 AM, Blogger தயா சொல்வது என்னவென்றால்...

பிரபு:

உங்கள் கருத்து 100 சதவிகிதம் சரி. இப்படி சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்: வைகோவின் முடிவு சந்தர்ப்ப சுழ்நிலையால் எடுக்கப்பட்ட சாதுரியமான முடிவு.

 

Post a Comment

<< முகப்பு