அ முதல் ஃ வரை

நான் படித்தது, பார்த்தது, என்னை பாதித்தது என எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள...

Monday, April 17, 2006

10 கிலோ வாங்கினால் 10 கிலோ ப்ரீ: ஜெ

ஆண்டிப்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கும் ஜெ சரத் வந்த குஷியோ என்னவோ? தானும் ஓரு சபதம் எடுத்தார்.

இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலை முன் நின்று அவரது ஆசியுடன் தமிழகத்திற்கு நல்ல செய்தி சொல்வதாக ஜெ ரேஷன் கார்டுக்கு தற்போது வழங்கப்படும் 20 கிலோ அரிசியில் முதல் 10 கிலோவுக்கு 3.50 ரூபாய்க்கும் அடுத்த 10 கிலோ இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

கலர் டிவி வாளை சன் டிவி கேடயத்தை கொண்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள். அரிசியை மட்டும் விடுவானே என அறிவித்துவிட்டார் போலிருக்கிறது. சிதம்பரம் வேறு 2 ருபாய்க்கு அரிசி வழங்க முடியும் என உத்தரவாதம் தந்திருக்கிறார். ஜெ கணக்கின் படி அவரது திட்டத்தில் ஒரு கிலோ அரிசியின் அடக்க விலை 1.75 ஆகிறது. கருணாநிதி சொன்னதை விட 25 பைசா கம்மி.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிதம்பரம் தன் வாக்குறுதி படி மத்திய அரசு அரிசியை வழங்க வேண்டும். அப்படி தராவிட்டால் ஜெ சிதம்பரத்தை தான் கைகாட்டுவார். பலே!

அவர்களின் வலையில் அவர்களே விழுந்துவிட்டார்கள்.

பிட் நியூஸ்.
சரத்தும் ராதிகாவும் அதிமுகவில் ஐக்கியமாகிவிட ராஜேந்தரோ திமுகவில் கரைந்துவிட்டார். நல்லா ஆள் பிடிக்கிறாங்கப்பா.

நீங்கள் சொன்னது: (2)

At 2:12 PM, Blogger VSK சொல்வது என்னவென்றால்...

மக்கள் ஒன்றும் மடையர்கள் அல்ல!

இந்த 'ஆணவம் பிடித்த' 'அம்மா'வையும் சரி, பேராணவம் பிடித்த 'அப்பா'வையும் சரி, தூக்கி எறிய வேண்டிய காலகட்டத்தில்தான் தமிழகம் இன்று இருக்கிறது!

'இலவசங்கள்' மூலம் பிச்சை எடுக்கும் இந்தக் கழகங்களின் முகத்திரை கிழியும் நேரமும் இதுவே!

சந்தர்ப்பவாத அரசியல் நடத்தி, இந்தப் 'பிள்ளை'யிடம் சில நாள், அந்த 'மகள்'இடம் சில நாள் 'ஓசிச்சோறு' சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பகுத்தறிவாளர் வீரமணி அவர்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

வரலாறு படைக்கப் போகும் தமிழ் மக்களை எண்ணும்போது, பெருமிதமாக இருக்கிறது.

இரு கழகங்களுமே தமிழுக்கு, தமிழனுக்கு விரோதமாகத்தான் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை மறந்திட வேண்டாம்.

 
At 8:02 PM, Blogger தயா சொல்வது என்னவென்றால்...

//'அவர்கள்' என்று நீங்கள் குறிப்பிடுவது திமுக அணியினரை எனில் நீங்கள் சார்ந்து இருக்கும் இக்கரை அதிமுக எனக் கொள்ளலாமா? //

அவர்கள் என நான் குறிப்பிடுவது திமுக கூட்டணியைத் தான். அவர்கள் விரித்த வலை என நான் குறிப்பிடுவது ப.சி 2 ரூபாய்க்கு அரிசி தர முடியும் என சொன்னதை தான். ப.சி இதை சொல்லாமல் ஜெ 10 கிலோ அரிசி இலவசம் என அறிவித்திருந்தால் 'திமுக' கூட்டணிக்கு பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். சும்மா இல்லாமல் வழிமொழிந்து ஜெவுக்கு திருப்பி கேட்கும் வாய்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.

3.80 அல்ல 3.50 தான. கட்டுரையில் திருத்தி விட்டேன். சுட்டிகாட்டியதற்கு நன்றி.

நான் அதிமுக சார்ந்தவன் அல்ல. அதிமுகவை விட திமுக பரவாயில்லை என சிலர் நினைக்கிறார்கள். நான் மாற்றி யோசிக்கிறேன். அதிமுகவை வீட்டுக்கு அனுப்புவோம் சரி என்று ஒத்துக்கொண்டால் ஏன் ஏற்கனவே அனுப்பிவிட்ட திமுகவை அழைக்கிறீர்கள்; விஜயகாந்தை ஆதரிப்போம் என சொல்கிறேன்.

 

Post a Comment

<< முகப்பு