அ முதல் ஃ வரை

நான் படித்தது, பார்த்தது, என்னை பாதித்தது என எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள...

Saturday, April 01, 2006

பெரும்பாண்மை கிடைக்குமா?

தமிழக வாக்காளர்கள் எப்போதும் ஒரே ஒரு கட்சிக்கு தான் பெரும்பாண்மையாக வாக்களிப்பார்கள் என ஒரு கருத்து இருக்கிறது. இது எந்தளவு உண்மை?

சில தேர்தல்களை தவிர அனைத்து தேர்தல்களிலும் ஒரு அலை வீசியது. அந்த அலையின் காற்றில் மக்கள் பெரும்பாண்மை நிலை எடுத்தார்கள்.

கொஞ்சம் யோசித்து பார்த்தால்,
1)ஹிந்தி திணிப்பு, திராவிடம், தமிழ் என ஒரு அலை எழுப்பி காங்கிரஸை திமுக வீட்டுக்கு அனுப்பியது.
2)பின்னர் கணக்கு கேட்டு எம்.ஜி.ஆர் ஒரு அலை எழுப்பி திமுகவை வீட்டுக்கு அனுப்பினார்.
3)எமெர்ஜென்ஸி, ஆட்சிகலைப்பு என்ற எதிர்ப்பு அலையில் எம்.ஜி.ஆர் நிரந்தரமாய் தங்கி விட்டார்
4)ஜா. ஜெ சேவல் புறா சண்டை நடத்தி அலை எழுப்பி தாங்களே அதில் மூழ்கியும் போனார்கள்.
5)ராஜீவ் கொலைசெய்யப்பட்டுவிட அனுதாப அலையில் இந்த முறை இரட்டை இலை கரை சேர்ந்தது.
6)அடுத்து வந்த ஆழி பேரலையான ஊழல் சுனாமி அதிமுகவை வீட்டுக்கு அனுப்பியது.

இந்த தடவை அப்படியொரு அலை இன்னும் எழவில்லை. மீண்டும் மக்கள் பெரும்பாண்மையாக ஒரே கட்சிக்கு வாக்களிப்பார்களா? அதே போல கடந்த தேர்தல்களில் காங்கிரஸ் vs திமுக, திமுக vs அதிமுக (5க்கும் மேல்) என்றே இருந்திருக்கிறது. கூடுதலாக யாரும் போட்டியிடவில்லை.

இன்றைக்கோ விஜயகாந்த களத்திலிருக்கிறார். எனக்கென்னவோ விமர்சனம் செய்பவர்கள் அவரின் சக்தியை குறைத்து எடுபோடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. சிவாஜி, டி.ஆர், பாக்யராஜ் போன்று தன்னை நம்பி மட்டும் தடலாடியாக களத்தில் குதிக்கவில்லை இவர். தகுந்த முன்னேற்பாடுகளுடனும் திட்டமிடலுடனும் தான் அரசியல் களத்தில் குதித்திருக்கிறார். அந்த முனைப்புக்கு உழைப்புக்கு பரிசில்லாமல் போகாது.

திமுகவில் இருக்கும் காங்கிரஸின் வாக்குகள் அவர்களின் அந்த கால தியாகிகளின் மிச்ச வாக்குகள் என்றே நான் நினைக்கிறேன். 5 வருட கால அவகாசத்தில் அந்த வாக்குகளில் கணிசமானவை காற்றில் கரைந்திருக்கும். காங்கிரஸின் உழைப்புக்கு புதிய இளம் வாக்காளர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே. அதுவும் இது சட்டமன்ற தேர்தல் வேறு.

இப்படி எந்த ஒரு ஆதரவான அலையோ எதிர்ப்போ இல்லாத நிலையில் ஒரு கட்சி மட்டும் பெரும்பான்மை அடைந்து விடுமா?

அங்கங்கே உள்ள நிலவரப்படி ஒவ்வொரு கட்சியும் கணிசமான எண்ணிக்கை பெற்று தொங்கு சட்டமன்ற நிலை வருவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது.

அப்படி ஒரு கூட்டணி ஆட்சி ஏற்பட்டால் அதில் அதிமுக. மதிமுக. தேமுதிக. விசி எல்லாம் இருக்கும்.

கொசுறு: ஜெ திமுக சந்திக்கும் கடைசி தேர்தல் என குறிப்பிட்டார். இதில் திமுக தோற்றாலும் ஜெயித்தாலும் விஜய்காந்திற்கு லாபம் தான். அதிமுக தோற்றாலும் லாபம் தான். அதிமுக வெற்றி பெற்றால் அவரின் நாற்காலி கனவு 2011 லும் சாத்தியப்படாமல் போகலாம்.

திறனாய்வுள்ள தமிழ்சசி போன்றவர்கள் மக்களின் மனநிலை பற்றி ஒரு பதிவு போடலாம்.

நீங்கள் சொன்னது: (0)

Post a Comment

<< முகப்பு