அ முதல் ஃ வரை

நான் படித்தது, பார்த்தது, என்னை பாதித்தது என எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள...

Wednesday, April 12, 2006

கடமையை செய் பலனை எதிர்பாராதே - ரபியிடம் ஜெ தத்துவம் -

ஜெவிடம் இன்று கொஞ்சம் உருப்படியாக கேள்விகள் கேட்டார் ரபி.

1. மத்திய நிதிகளும் ஒழுங்காக வரவில்லை. அரசு கஜானாவோ காலி. ஆனால் எப்படி கவர்ச்சி திட்டங்களை தொடங்கினீர்கள்? அதற்கு நிதி எங்கிருந்து வரும்?
பதில்: வருவாய் இழப்பை சரி செய்வது தான் ஒரு தீர்வு என முடிவு செய்தேன். அரசுக்கு வருமானம் வரும் வழிகள்:
அ. விற்பனை வரிகள்
ஆ. மது விற்பனை
96-01ல் 34000 கோடியாய் வசூல் ஆன வருமானம் தனது ஆட்சியில் கிட்டதட்ட 59000 கோடியாக முன்னேறியது.
அரசு மது விற்பனை செய்யத்தொடங்கியவுடன் 96-01ல் 12000 கோடியாய் வசூல் ஆன வருமானம் தனது ஆட்சியில் கிட்டதட்ட 21000 கோடியாக முன்னேறியது.
மணல் குவாரிகள் மூலம் 64 கோடியாய் வசூல் ஆன வருமானம் தனது ஆட்சியில் கிட்டதட்ட 380 கோடியாக முன்னேறியது.
இதனால் வந்த வருவாய்களை கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ரபி இங்கே ஆனால் வெளியே மதுவின் விற்பனை வருவாயை சாதனையாக சொல்கிறார்கள் என கிண்டல் செய்கிறார்களே என்றவர் வருவாயை அரசுக்கு சாதகமாக திருப்பிவிட்டிருக்கிறீர்கள். அது சரியா என்றார்?
ஆம் என்ற ஜெ மது விற்பனை எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. தனியார் விற்பனை செய்தாலும் அரசு செய்தாலும் மதுவின் அளவு குறையவுமில்லை கூடவுமில்லை. பொய்யாக கணக்குக்காட்டி இழந்து கொண்டிருந்த வருமானத்தை அரசுக்கு திருப்பியதாக சொன்னார்.

அடுத்து லாட்டரி சீட்டை தடை செய்ததன் மூலம் மக்களின் பணம் பொதுவில் வந்து புழங்கியதால் லாட்டரி வியாபாரிகள் சுரண்டிக்கொண்டிருந்த பணம் மக்களின் செலவுக்காக உபயோகமானது. அதனால் பொருளாதாரம் சீரானது எனக் குறிப்பிட்டார்.

2. ரபி அடுத்து, திட்டங்கள் தீட்டுகீறீர்கள் சரி. என்ன Feedback mechanism
வைத்திருக்கிறீர்கள் என்றார்? (ஜால்ரா மட்டுமே காதில் விழுமா! மற்ற ரியாக்ஷனையும் உணர்ந்தீர்களா என கேட்டிருக்கலாம்!)
தனக்கு நண்பர்கள் பத்திரிக்கைகள் மற்றும் வேறு உபயங்கள் மூலம் தகவல் வருவதாக சொன்னார்

3. ஆதிதிராவிடர்களுக்கான விடுதிகளை பற்றி:
தான் 2001ல் ஆய்வு நடத்தியபோது விடுதிகள் வாடகை கட்டங்களில் இயங்கியது என தெரிய வந்ததாதகவும் Running water, Electricity, Sanitation வசதிகள் இல்லையென அறிந்து கொண்டதாகவும் அதனால் அரசுக்கு சொந்தமானதாக அவைகள் இருக்க வேண்டும் எனக் கருதி அதற்கு தேவைப்படும் செலவை எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கூடுதல் தொகை ஓதுக்கி 761 விடுதிகளை 5 ஆண்டுகளில் கட்டியிருப்பதாக சொன்னார். இந்த விடுதிகள் இப்பொழுது தரமாக இருப்பதாகவும் தண்ணீர், மின்சாரம், கழிப்பிட வசதிகள் உள்ளடக்கியதாகவும் இருக்கிறது என குறிப்பிட்டார். அதோடு அவர்களுக்கு இலவசமாக Atlasம் Tamil-English
dictionaryயும் வழங்கப்படுவதாக சொன்னார். (இது அறிவு வளர்க்க பயன்படும். டி.வி?. யாராவது விடுதிகளின் தரத்தை நேராக கண்டவர்கள் உறுதியோ மறுப்போ சொல்லாம்)

4. அறிவியல் தமிழ் என்ற பாடநூல் பற்றி கேட்டார்
தமிழகத்தில் இப்பொழுது எல்லா பள்ளிகளிலும் (அரசு/தனியார் உள்பட) இந்த பாடம் கட்டாயமாக கற்றுத் தர வேண்டும் என இருப்பதாக சொன்னார்.
ஆனால் தமிழினக் காவலர் 96-ல் டில்லியில் உள்ள Jawarhalal Nehru university தமிழுக்காக ஒரு இருக்கைக்கு(chair) அரசிடம் ஒரே தவணையில் 50 லட்சம் கேட்டதாகவும் இவரோ நாங்கள் வருடத்துக்கு பத்து தருகிறோம் என அனுப்பியதாகவும் அந்த பத்தையும் பல்கலைகழகம் திருப்பிஅனுப்பிவிட்டதாகவும் கலைஞர் அத்துடன் அப்படியே விட்டுவிட்டதாகவும் சொன்னார். பின்னர தான் வந்த பிறகு ஒரே தவணையில் 50 லட்சத்தையும் செலுத்தி இருக்கை இன்று
இருப்பதாக பெருமையுடன் குறிப்பிட்டார். (somebody can throw some light on this Chair. I don't understand how this functions..)

ரபி ஜெ இந்த விஷயம் தனக்கு தெரியாதனெவும் இது போல பல சாதனைகளை நீங்கள் விளம்பரப்படுத்தியிருக்க வேண்டாமா எனக் கேட்டார். புன்னகையே பதிலாக வந்தது.

தனிப்பெரும் ஜெயலலிதாவின் சாதனைகள் என அவர் புகழ் பேசிய போது இது எனது தனிப்பட்ட சாதனையல்ல மக்களின் அன்பும் ஆதரவினால் தான் சாத்தியமானது என தன்னடக்கம் காட்டினார்.

கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என தான் தன் பணியை செய்வதாகவும் வெற்றியில் துள்ளுவதும் தோல்வியல் துவளுவதும் இல்லாமல் மனதை சீராக வைத்திருந்தால் வாழ்ககையில்
வெற்றி பெறலாம் என ஜெயாமர்த்தினியாய் மாறி தத்துவம் சொன்னார்.

அத்துடன் இன்றைய பேட்டி நிறைவு பெற்றது.

Cross-Adverstising என்று சொல்வார்கள். சில கோளாறினால் என்னுடைய இந்த பதிவில் மற்றவர்கள இடும் பின்னூட்டங்கள் தமிழ்மணத்தில் அப்டேட் செய்யப்படுவதில்லை. அதனால் இன்றைய துயரச் செய்தியான ராஜ்குமார் காலமானார் பதிவுக்கு தொடுப்பு கொடுத்திருக்கிறேன்.

நீங்கள் சொன்னது: (0)

Post a Comment

<< முகப்பு