அ முதல் ஃ வரை

நான் படித்தது, பார்த்தது, என்னை பாதித்தது என எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள...

Thursday, April 13, 2006

ஈழம் - ஜெ பேட்டி

இன்றைய பேட்டியில் முக்கியமான கேள்வி. வைகோ, திருமா என கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை பற்றி ரபி குறிப்பிட ஜெ மற்ற கட்சிகளும் (பெயரை சொல்லி) கூட்டணியில் இருப்பாதாக சொன்னார்.

ரபி, தான் வைகோ திருமா பற்றி தனித்து குறிப்பிட்டது அவர்களுக்கு தமிழ் பற்றாளர்கள் என்ற Image இருக்கிறது. அவர்கள் இருவரும் ஈழத் தமிழர்கள் பற்றி அடிக்கடி பேசுபவர்கள். ஆனால் உங்களுக்கும் அவர்களுக்கும் இதில் உள்ள வேறுபாடு பற்றி என்றார்.

சுருக்கமாக பதில் சொன்ன ஜெ ஈழம் என்பது ஓரு Concept, கனவு,குறிக்கோள்,லட்சியம். அதோடு அது இலங்கையின் ஓரு பகுதியை மட்டுமே குறிக்கிறது. ஆனால் தான் மற்ற பகுதிகளில் உள்ள தமிழர்களையும் (எஸ்டேட்களில் வேலை செய்பவர்களும் மலையக மக்களும்) சேர்த்து அவர்களை இலங்கை தமிழர்களாக பார்ப்பதாகவும் அவர்களின் நல்வாழ்வுக்கு பாதுகாப்புக்கு இலங்கை அரசு உதவ வேண்டும் என தன் நிலைப்பாடு பற்றி சொன்னார். (ரபி இன்னும் கொஞ்சம் கிண்டியிருந்திருக்கலாம்)

மற்ற கேள்விகள்:
1) தமிழக அரசு ரேஷன் பெறுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியிருப்பதாகவும் ஆனால் போதிய மண்ணென்னய் இல்லாமல் வழங்க முடியவில்லை எனக் குறிப்பிட்டார். மண்ணென்னய் மாநில அரசால் தனியாரிடமிருந்தோ வேறு யாரிடமிருந்தோ வாங்க முடியாது எனவும் பிரதமர் அதிகாரிகளிடம் ஆணையிட்டும் இன்று வரையில் மண்ணென்னய் பாதியளவிலேயே மத்திய அரசால் வழங்கப்படுவதாக சொன்னார்.

2)தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கடல் நீரை குடிநீராக்குவது (நேற்றைய பேட்டியில் சென்னையின் தேவையை 3 ஏரிகளும் வீராணமும் மட்டும் சமாளிக்க முடியாது கடல் நீரை குடிநீராக்குவது அவசியம் என சொன்னார்), புதிய தலைமைச் செயலகம் (கேரளா கூட சொந்த கட்டடத்தில் இயங்குகிறது) கட்டுவது என்ற திட்டங்களை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவேன் என்றார்.

3) வாரிசு அரசியல் பற்றி விரிவாக பேசியவர் நேரு குடும்பம் கருணாநிதி குடும்பம் ராமதாஸ் குடும்பங்களின் வாரிசுகள் நாட்டு நலனுக்கு நல்ல முன் மாதிரி இல்லை எனக் குறிப்பிட்டார்.

நேற்றுவரை டிஸ்கொத்தேவுக்கு சென்று கொண்டிருந்த விளையாட்டுப்பிள்ளையான தயாநிதிக்கு கேபினட் அந்தஸ்த்தில் நாட்டிற்கே மந்திரி பதவி, அன்புமணியும் அப்படியே! இவர்களை பார்க்கும் இன்றைய இளைஞர்கள் விரக்தியடைந்து படிக்காமல் உழைக்காமல் முன்னேற வேண்டும் எனத் தானே ஆசைப்படுவார்கள் என கேள்வி எழுப்பினார். உழைக்கும் தகுதியுள்ளவர்கள் எல்லா அமைப்பிலும் இருப்பார்கள். தான் எம்.எல்ஏ வாக இருந்தால் தன் மனைவிக்கு எம்.பியாக இருந்தால் மகனுக்கு என்று அவர்களே திரும்பி வருவது என்ன நியாயம்? மற்றவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டாமா என்றார். அதனால் நேரு குடும்பமானாலும் கருணாநிதி குடும்பமானாலும் வாரிசு அரசியலை ஊக்குவிக்க கூடாது என்றார்

CHEMISTRY ya ARITHMETIC-AA
CNN-IBN&HINDU PRE POLL SURVEY பற்றிய செய்திகளுக்கு இட்லி வடை தளத்தை பாருங்கள்.

1)அம்மா பாப்புலாரிட்டியில் முன்னேறியிருக்கிறார்.
2)விஜயகாந்த அம்மாவிடம் இருந்து 26 சதவிகித ஓட்டுக்களை பிரிக்கிறார். அதே அளவில்
3)புதிய வாக்காளர்களின் வாக்குகளை பெறுகிறார். மிச்ச வாக்குகள் 49 திமுகவிடமிருந்து பிரிக்கிறார்.
4)50-50 என தொங்கு சட்டமன்றம் கண் முன்னே தெரிகிறது.
5)ஹிண்டு ராம் It's truly a major shift in the ground. If chemistry favours amma Arithmetic favours DMK+ என்றார். Error of Margin 1% எனும் போது 2% சதவிகதமாவது வித்தியாசம் இருக்க வேண்டும். ஆனால் சர்வே முடிவு இதை காட்டாததால் To close to Call என்று சொல்லிவிட்டார்கள்.
6)இது புதிய வரலாற்றை படைக்கப்போகும் தேர்தல். மத்திய அரசில் ஒரு விளைவை ஏற்படுத்த போகும் தேர்தல் என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

Side Note:
CNN-IBN is aggresive about covering the South vs the NDTV and Headlines today English news channels. So we can expect more coverage on Tamilnadu on their News. Earlier they dedicated a week's program on Bangalore and those presence for the coverages just last week in Bangalore helped them in getting a mileage today by covering Dr. Rajkumar's last journey. Finally an English News channel arrived to South.

நீங்கள் சொன்னது: (1)

At 2:01 PM, Anonymous Anonymous சொல்வது என்னவென்றால்...

"ஈழம்" என்பதும் முழு இலங்கையையும் குறிக்கும் சொல் தான் என்பது ஜெயலலிதாவுக்கு தெரியவில்லைப் போலும். அதில் "தமிழீழம்" என்பதே வடகிழக்கை இணைத்த பிரதேசமாகும்.

 

Post a Comment

<< முகப்பு