அ முதல் ஃ வரை

நான் படித்தது, பார்த்தது, என்னை பாதித்தது என எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள...

Friday, April 14, 2006

தேர்தல் ஆணையம் பாரபட்சம் - ஜெ பேட்டி

இன்றைய பேட்டியில்:
1. தேர்தல் ஆணையம் தமிழகத்தின் தினசரி நிர்வாக நடவடிக்கைகளில் கூட தலையிடுவதாக குறை கூறினார்.
Moral of Conduct-ன்படி தாங்கள் தான் புதிய திட்டங்களையும் கொள்கைகளையும் அறிவிப்பதில்லையெனவும் அப்படி சட்டம் எதுவுமில்லை எனச் சொன்னார்.
ஏற்கனவே தொடங்கப்பட்ட சில திட்டங்களை கூட ஆணையம் நிறுத்தி விட்டதாக சொன்னவர் ஆனால் சிதம்பரம் நாடாளுமன்றத்தில் பல சலுகைகளை தொடர்ந்து அறிவித்துக்கொண்டிருக்கிறார். தேர்தல் ஆணையம் ஒன்றும் சொல்லவில்லை. கேரளாவில் முல்லைப் பெரியார்(பெரிய + ஆறு - PERIYAR) பற்றி தீர்மானம் இயற்றுகிறார்கள். அது ஓரு Emotive Issue. ஓட்டுகளுக்காகவே அதை அவர்கள் செய்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் சும்மா தான் இருக்கிறது.
(சிதம்பரம் இன்றும் பல வரி சலுகைகளை அறிவித்திருக்கிறார். இட ஓதுக்கீடும் சட்டமன்ற தேர்தல் அறிவிப்புகள் வெளியான பிறகு தான் அறிவிக்கப்பட்டது)

2. தான் பலருக்கும் உதவிகள் செய்வதாகவும் வெளியே அது தெரியாததால் தான் சினிமா துறையினருக்கு மட்டுமே உதவிகள் வழங்கப்படுவதாக ஒரு மாயத்தோற்றம் இருப்பதாக சொன்னார். தொழில் நுட்ப கலைஞர்களுக்கான வீடு கட்டும் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லையெனவும் அதையும் அடுத்த ஆட்சியின் ஓரு திட்டமாக சொன்னார்.

3.ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் பல துறைகளிலும் வளர்ச்சி காண வேண்டுமெனவும் இந்தியாவில் விளையாட்டு துறை Neglected ஆக இருப்பதாகவும் தமிழ்நாட்டிலாவது முயற்சிகள் செய்யலாமே என தான் அவற்றை ஊக்குவிப்பதாகவும் சொன்னார்.
கடந்த ஆட்சியிலேயே அதற்கென ஓரு அமைப்பு தொடங்கப்பட்டதெனவும் அந்த அமைப்பு வீரர்களை அடையாளங்கண்டு அவர்களை தத்தெடுத்து ஊக்குவிப்பதாகவும் சொன்னவர் கடந்த ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஊராட்சியிலும் பொருட்காட்சிகள் நடத்தப்பட்டு நிறைவு நாளன்று விளையாட்டு போட்டிகள் நடப்பதாகவும் அதில் பெருமைப்படுவதாக தெரிவித்தார்.
(ஜெவின் கடந்த அரசில் தான் சென்னையில் சர்வதேச தரம் வாயந்த விளையாட்டு அரங்குகள் கட்டப்பட்டன. ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல் மற்றும் ஜவகர்லால் அரங்கம் என பல தோன்றின. இந்த விளையாட்டுகள் அதிகம் கவனம் பெறாதாதலும் மக்களிடம் போய் சேரவில்லை. அதோடு இந்த மக்கள் அளவில் சொற்ப எண்ணிக்கையானவர்கள். இதை விட மற்ற விஷயங்கள் பெரிதாக இருந்ததால் பத்திரிக்கைகளும் கண்டுகொள்ளவில்லை. இந்த ஆட்சியிலும் மெரினா நீச்சல் குளம் புதுப்பொலிவுபெற்றிருக்கிறது. புதிய புல் தலை அரங்கங்கள் நிர்மானிக்கப்பட்டிருக்கின்றன. வழக்கம் போல அவை கண்டுகொள்ளப்படவில்லை.)

4. கேரளாவில் மக்கள் எம்.ஜி.ஆர் மீது இன்னும் ப்ரியம் வைத்திருப்பதாகவும் அதிமுக மேல் ஒரு நல்லெண்ணம் இருப்பதாலும் நலன் விரும்பிகள் கொடுத்த உற்சாகத்தினாலும் தொண்டர்களின் ஈடுபாட்டினாலும் இழப்பதற்கு ஓன்றும் இல்லை என்பதாலும் அங்கே அதிக தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் குறிப்பிட்டார் (அய்யேடா! ஓரு புள்ளி இல்லாம ஒரே வாக்கியமா சொல்லியாச்சு). பலர் நீங்கள் தீவிரமாக ஈடுபட்டால் முதல்வராக கூட ஆகி விடலாம் என சொன்னார்கள் என்றவர் தமிழ்நாட்டுக்கே நேரம் போதவில்லை அங்கே வேறா என ஜோக்கடித்தார். சேச்சி! என்னவோ திட்டம் வைத்திருக்கிறார்.

5. பத்திரிக்கைள் இன்று தன்னை புரிந்துகொண்டு இன்று நெருங்கி வந்திருப்பதாகவும் அதனால் தான் மனநிறைவடைவதாகவும் சொன்னார்.

முத்தாய்ப்பாக இருப்பதும் வாழ்வதும் நாட்டு மக்களுக்கே. எனக்கென்று எதுவுமில்லை. நாட்டு மக்களுக்காத் தான் நான் உழைக்கிறேன் என சொன்னார்(பிரதமர் கனவு இன்னும் இருக்கிறது போல. அதனால் தான் மூன்றாம் கூட்டணி தோன்றியிருக்கிறது. தேர்தல் முடிவுகள் ஜெவுக்கு சாதகமானால் மத்தியில் மாற்றங்கள் உறுதி)

நீங்கள் சொன்னது: (0)

Post a Comment

<< முகப்பு